Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நெல்லையில் வீடு, வீடாக திருட்டு விசிடி விற்பனை
நெல்லை: நெல்லையில் பைக்கில் வீடு வீடாக சென்று திருட்டு விசிடி விற்பவர்களை கைது செய்ய சினிமா வினியோஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட சினிமா வினியோஸ்தரர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், திருட்டு விசிடி தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு சட்டம் இயற்றியது. போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் திருட்டு விசிடி குறைந்துள்ளது.
எனினும் உள்ளூர், வெளியூர் பஸ்களில் சேனல்கள், மினி சினிமா, காமெடி, சூப்பர் பாடல்கள் என்ற போர்வையி்ல் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் சினிமா தொழில் நலிவடைகிறது.
தூத்துக்குடி, கோவில்பட்டி, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் டிவிக்களில் புதிய படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
தனியார், அரசு பஸ்களில் திருட்டு விசிடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் சிலர் வீடு வீடாக சென்று திருட்டு விசிடி விற்பனை செய்கின்றனர்.
திருட்டு விசிடி விற்பனையை தடுக்க வேண்டும். திருட்டு விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.