Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதிமுக பிரமுகர் மீது புகார் கொடுத்ததால் சோனாவை விசாரிக்கும் போலீஸ்!!
ஆனால் கவர்ச்சி நடிகை சோனா விஷயத்தில் நடப்பது வேறு. காரணம் அவர் புகார் கொடுத்திருப்பது அதிமுக பிரமுகர் மீது! விளைவு, புகார் கொடுத்த சோனாவையே மடக்கி மடக்கி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் புறநகர் போலீஸார்.
அதிமுக பிரமுகரான ராமலிங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து தனது மரத் தொழிற்சாலையை நடத்தி வந்தார் நடிகை சோனா. இதற்கு ரூ 7 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.
இப்போது தனது நிறுவனத்தை போரூருக்கு இடம்மாற்றியுள்ளார். இதற்காக முறைப்படி வீட்டு உரிமையாளரான ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வாடகை பாக்கியைக் கழித்துக் கொண்ட பிறகு ரூ 4 லட்சம் வரை சோனாவுக்கு ராமலிங்கம் தர வேண்டி வந்தது.
ஆனால் கட்டட பராமரிப்பு செலவு என்று கூறி, முழுத் தொகையையும் அவர் தரமறுத்துவிட்டார். இதற்காகத்தான் சோனா புகார் தந்துள்ளார். ஆரம்பத்தில் இவரது புகாரை போலீஸார் ஏற்கவே மறுத்துவிட்டது தனிக்கதை!
உடனே அவர் கமிஷனர் அலுவலகம் போக, அங்கே, இது புற நகர் லிமிட்டில் வருவதால் அங்கே போய் புகார் கொடுங்கள் என அனுப்பிவிட்டனர்.
"நடிகைதானே... என்ன செய்துவிட முடியும் அவரால்' என்ற ராமலிங்கத்தின் நினைப்பும், ஆளும் கட்சி பிரமுகர் என்ற மிதப்பும் சோனாவை இப்படி வைக்கிறது. இதில் வேறு வில்லங்கங்களும் உள்ளன. அவை இனிமேல்தான் வெளிவரும்," என்கிறார்கள் திரையுலகினர்.
ஆட்சிக்கு வந்து முழுசாக மூன்றுவாரங்கள்தான் ஆகின்றன...அதற்குள் அடிப்பொடிகள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களா!