Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"பீர் விற்கவாவது அனுமதி கொடுங்க!" - தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை
இன்றைய சூழலில் தமிழக திரையரங்குகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களை மீறி படங்களை சுயேச்சையாக திரையிட முடிவதில்லை.
பெரிய ஸ்டார்கள் முதல் குட்டி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. க6 மாதங்கள் கழித்து ரிலீஸாகும் படங்களுக்கு இப்போதே தியேட்டர்களை புக் பண்ண வேண்டிய நிலை.
அப்படியே கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணாலும் போதிய கூட்டமின்றி ஓரிரு வாரங்களில் அந்தப் படங்கள் தூக்கப்படுகின்றன.
இன்னொரு பக்கம், உலகக் கோப்பை கிரிக்கெட் போன்ற நிகழ்வுகள் குறுக்கிடும்போதும் தியேட்டர்களில் கூட்டம் சுத்தமாகக் குறைந்துவிடுகிறதாம்.
இந்தப் பிரச்சினையைச் சமாளித்து தியேட்டர்களில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள, தியேட்டருக்குள்ளேயே குறிப்பிட்ட சில மதுபானங்களை மட்டும் விற்பது போல டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்றும், பார் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர். பெங்களூரில் சில திரையரங்குகளில் பீர் விற்கப்படுகிறது. அதுபோலவாவது உரிமை தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.