Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
'காதல் அரங்கத்திற்கு' பச்சைக் கொடி
பெங்களூரைச் சேர்ந்த ஷெர்லி தாஸ் நாயகியாக நடிக்க, வேலு பிரபாகரனின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காதல் அரங்கம்.
படத்தில் ஷெர்லி தாஸ் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார். இவற்றையெல்லாம் நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என சென்சார் போர்டு கூறி விட்டது. ஆனால் நீக்க முடியாது என்று வேலு பிரபாகரன் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இறங்கி வந்துள்ள பிரபாகரன், ஷெர்லி தாஸ் நிர்வாணமாக தோன்றும் காட்சிகளை நீக்கி விட்டார். மேலும் படத்தின் தலைப்பையும் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று மாற்றி விட்டார்.
படத்தில் ஆபாசமானதாக சென்சார் போர்டு கூறிய காட்சிகளையும் எடுத்து விட்டார். இதையடுத்து இப்படத்தை திரையிட சான்றிதழ் தந்து விட்டதாம் சென்சார் போர்டு.
இதையடுத்து முடங்கிப் போயிருந்த இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.
நான் சொல்ல வந்த விஷயம் படத்தில் அப்படியேதான் இருக்கிறது. அது தொடர்பான சில காட்சிகளை மட்டுமே நீக்கியுள்ளேன். படம் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது என்று கூறியுள்ளார் பிரபாகரன்.