Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'காதல் அரங்கத்திற்கு' பச்சைக் கொடி
பெங்களூரைச் சேர்ந்த ஷெர்லி தாஸ் நாயகியாக நடிக்க, வேலு பிரபாகரனின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காதல் அரங்கம்.
படத்தில் ஷெர்லி தாஸ் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார். இவற்றையெல்லாம் நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என சென்சார் போர்டு கூறி விட்டது. ஆனால் நீக்க முடியாது என்று வேலு பிரபாகரன் பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் இறங்கி வந்துள்ள பிரபாகரன், ஷெர்லி தாஸ் நிர்வாணமாக தோன்றும் காட்சிகளை நீக்கி விட்டார். மேலும் படத்தின் தலைப்பையும் வேலு பிரபாகரனின் காதல் கதை என்று மாற்றி விட்டார்.
படத்தில் ஆபாசமானதாக சென்சார் போர்டு கூறிய காட்சிகளையும் எடுத்து விட்டார். இதையடுத்து இப்படத்தை திரையிட சான்றிதழ் தந்து விட்டதாம் சென்சார் போர்டு.
இதையடுத்து முடங்கிப் போயிருந்த இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.
நான் சொல்ல வந்த விஷயம் படத்தில் அப்படியேதான் இருக்கிறது. அது தொடர்பான சில காட்சிகளை மட்டுமே நீக்கியுள்ளேன். படம் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது என்று கூறியுள்ளார் பிரபாகரன்.