Don't Miss!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்: சரியான பாடம் புகட்டிய நடிகை
Recommended Video
மும்பை: விருது விழாவில் தன்னிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனுக்கு பாடம் புகட்டியுள்ளார் நடிகை சுஷ்மிதா சென்.
பாலிவுட் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
சிறுவன்
6 மாதங்களுக்கு முன்பு நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக ஒரு 15 வயது சிறுவன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான். கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் அவனை கண்டுபிடிக்க முடியாது என்று அந்த பையன் நினைத்தான்.
பாடம்
நான் அந்த பையனின் கையை பிடித்து இழுத்தவுடன் அவன் பயந்துவிட்டான். 15 வயது சிறுவன் என்பதால் அவன் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.
பாவம்
ஹலோ சொல்வது போன்று சிறுவனின் கழுத்தை பிடித்து கூட்டத்திற்கு முன்பு நடந்தேன். நீ செய்ததை இந்த கூட்டத்தில் உள்ளவர்களிடம் கூறினால் நீ காலி மகனே என்று அவனிடம் கூறினேன். அவனோ நான் எதுவும் செய்யவில்லை என்று சாதித்தான்.
ஒப்புக் கொள்
தவறு செய்துவிட்டாய், ஒப்புக் கொள் என்று நான் அவனிடம் கூறினேன். மன்னித்துவிடுங்கள். இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சிறுவன் என்னிடம் கூறினான். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பொழுதுபோக்கு அல்ல என்று சிறுவனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.
பாதுகாப்பு
10, 15 பாதுகாவலர்களுடன் செல்லும் நடிகைகள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் பாதுகாவலர்களையும் தாண்டி பலர் சில்மிஷம் செய்கிறார்கள் என்றார் சுஷ்மிதா சென்.