மரம் விழுந்ததில் பைக்கோடு சிக்கி பலியான உதவி இயக்குநர்
சென்னை: சாலையோரம் இருந்த பெரிய மரம் திடீரென முறிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த திரைப்பட உதவி இயக்குநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தனியாக திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முற்பகலில் மோடடார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். அசோக் நகர் 11வது அவென்யூவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது, சாலையோர பிளாட்பாரத்தில் இருந்த பழமையான தூங்குமூஞ்சி மரம் அப்படியே சரிந்து விழுந்தது.
அந்த இடத்தில் ஏராளமான பேர் இருந்தனர். இந்த நிலையில், பாலமுருகன் மீது அந்த மரம் அப்படியே சாய்ந்து நசுக்கியது. இதில் தலை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பாலமுருகன்.
விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மரத்தை வெட்டி, பாலமுருகனின் உடலை மீட்டனர்.
இறந்த பாலமுருகனுக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாராம் பாலமுருகன்.


Click it and Unblock the Notifications











