Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!!
சென்னை: எழுத்துத் துறையில் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு அண்ணா விருதினை வழங்குகிறகு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.
இந்த அமைப்பின் ஒரு அங்கமான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி விழா நடக்கிறது.
அகில இந்திய திரைப்பட சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் ஃபெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அகில இந்திய திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் கலந்துக் கொண்ட கூட்டம் தர்மேஷ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்தியாவில் மற்ற தொழில்களில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேர அளவைப் போல், சினிமா தொழிலுக்கும் 8 மணி நேரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை 10 சதவீதத்திலிருந்து கூடுதலாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு தலைமையைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.
ஜனவரி மாதம் இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் வரும் நிதியை திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்", என்றார்.