'ரஜினி உங்களைச் சந்திப்பார்... ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!' - லதா ரஜினி

கடந்த மூன்று தினங்களாக ரஜினி உடல்நிலை குறித்த வதந்திகள் ரசிகர்களை நிலைகொள்ளாமல் செய்துள்ளன. திருச்சி அருகே ஒரு ரசிகர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனையுடன் தங்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் போன் செய்து ரஜினி உடல்நிலை குறித்து பதட்டத்துடன் விசாரித்து வருகின்றனர்.
ரஜினி மனைவி லதா ரஜினி அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, ரசிகர்களுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோள்:
ரஜினி மிக நலமாக உள்ளார். நல்ல ஓய்வில் இருக்கிறார். அவருக்காக பிரார்த்திக்கும் ரசிகர்களின் அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வதந்திகளை தயவு செய்து நம்ப வேண்டாம். அதை பரப்ப துணை போகவேண்டாம்.
விரைவில் ரஜினி உங்களிடம் பேசுவார். பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். அதுவரை பதட்டம் கொள்ளாதீர்கள். ரஜினியின் உடல்நிலை குறித்து நாங்கள் கவனம் செலுத்தும் வேளையில், வெளியில் பரவும் இதுபோன்ற வதந்திகள் எங்களை மிகவும் வருத்ததுக்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற வதந்திகள் ரஜினிக்கும் மிக்க வேதனையைத் தந்துள்ளது. ரசிகர்கள் யாரும் தவறான முடிவுக்குப் போகாதீர்கள். ரஜினி உங்களைச் சந்திப்பார்!"


Click it and Unblock the Notifications











