Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வறுமை... துணை நடிகைக்கு சரோஜாதேவி செய்த உதவி!
கஷ்டப்படும் கலையுலகினருக்கு முடிந்தவரை அடிக்கடி உதவிகளைச் செய்து வருகிறார் (இருந்த இடம் அப்படி!).
சமீபத்திலும் அப்படி ஒரு உதவி செய்து நெகிழ வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் - சரோஜா தேவிநடித்த திருடாதே உள்பட ஏராளமான படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் லட்சுமணன். இவரது மனைவி சுசிலா. தற்போது சென்னை நந்தனத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். துணை நடிகையான சுசிலா 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற படத்தில் நடிகை சரோஜாதேவியுடன் இணைந்து நடித்து உள்ளார்.
சுசிலாவின் கணவர் லட்சுமணன் இறந்துவிட்டார். தற்போது சென்னை நந்தனத்தில் வசித்துவரும் சுசிலா வீட்டு வாடகைகூட செலுத்த முடியாமல் வறுமையில் வாடுகிறார். இதனால் வீட்டைக் காலி செய்யும்படி அவரை வீட்டு உரிமையாளர் கூறினார்.
எங்கு செல்வது... என்ன செய்வது என்று தவித்த சுசிலாவுக்கு, சரோஜா தேவியின் நினைவு வர, பெங்களூரில் இருக்கும் அவருக்கு போனில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.
உடனே தயங்காமல், சாக்குப் போக்கு சொல்லாமல், ரூ.20 ஆயிரத்தை சுசிலாவுக்கு அனுப்பி வைத்தார் சரோஜாதேவி. தக்க சமயத்தில் சரோஜாதேவி செய்த உதவிக்கு சுசிலா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்....!