சிங்கமுத்து விவகாரம்: விளக்கம் தர வடிவேலுவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

By Sudha

Vadivelu
சென்னை: வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்து மீது தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு வடிவேலுவுக்கும் அவரது வழக்கறிஞருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் வடிவேலு உதவியாளர் சங்கர் என்பவர் விருகம்பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் சிங்கமுத்து, தயாரிப்பாளர் கண்ணன் ஆதரவாளர்கள் வடிவேலு அலுவலகத்துக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிங்கமுத்து, கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் வக்கீல் அறிவழகன் மூலம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வக்கீல் அறிவழகன் வாதாடும் போது வடிவேலு மீது தான் முதன்முதலாக தயாரிப்பாளர் கண்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பிறகுதான் வடிவேலு தரப்பில் புகார் செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே வடிவேலு தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டில் சிங்கமுத்துவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நடிகர் வடிவேலுவின் வக்கீல் பால்கனகராஜ் வாதாடும் போது, "கொலை மிரட்டல் விடுவது மோசமான குற்றம். வடிவேலு தரப்பில் சிலவிளக்கங்களை தெரிவிக்க வேண்டி இருக்கிறது"

இதைப் பொறுத்தே வடிவேலுவும், அவரது வக்கீலும் தங்கள் பதிலை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி தேவதாஸ் உத்தர விட்டார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X