Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சின்னி ஜெயந்த்துக்கு ரஜினி கொடுத்த நாயை திருடிய மாணவர் கைது- நாய் மீட்பு
சின்னிஜெயந்த், சென்னை மைலாப்பூர் பீமண்ண கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். பக் ரக ஆண் நாயை இவர் வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இந்த நாயை ரஜினிகாந்த், சின்னிக்கு அன்புப் பரிசாக கொடுத்திருந்தாராம். இதனால் கவலையில் ஆழ்ந்தார் சின்னி.
மயிலாப்பூர் போலீஸில் தனது நாய் திருட்டு போனது குறித்து அவர் புகார் கொடுத்தார். களத்தில் இறங்கிய போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சின்னியும், நாயின் புகைப்படம் அடங்கிய போஸ்டரை தயாரித்து அதில் தனது செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு நாய் குறித்த தகவல் தந்தால் பரிசு தரப்படும் என அறிவித்தார்.
போஸ்டரைப் பார்த்த மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுவன் நாய் குறித்த தகவலை போலீஸாருக்குத் தெரிவித்தான். இதையடுத்து நாய் வைக்கப்பட்டிருந்த மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் விரைந்து சென்று நாயை மீட்டனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில், மணி என்ற பத்தாம் வகுப்பு மாணவர் நாயைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து நாயை திருடியதற்காக மணியை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக இது தனது நாய் என்று மணி பிடிவாதமாக கூறினாராம். இதையடுத்து யோசித்த போலீஸார், மணியையும் சின்னியையும் அருகருகே நிற்க வைத்தனர். நாயைக் கொண்டு அவர்கள் முன்பு நிறுத்தியபோது, நாய் சின்னியை நோக்கி பாய்ந்து சென்று அவர் மீது ஏறி விளையாடியது.
ஆனால் மணி நாயை கூப்பிட்டபோது அது வரவில்லை மாறாக குரைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் நாயின் உரிமையாளர் சின்னிதான் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
காணாமல் போன நாய் திரும்பி வந்த சந்தோஷத்தில் சின்னி அழுது விட்டார். எனது பையன் கிடைத்து விட்டான் என்று சத்தம் போட்டு கத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த நாயை கடந்த ஓராண்டுக்கு முன்பு பரிசாகக் கொடுத்தார். ஸ்பார்க் என்று பெயர் சூட்டி எனது குழந்தையைப் போல ஆசையோடு வளர்த்தேன். மிகவும் புத்திசாலித்தனமான இந்த நாய் காணாமல் போனது எனக்கு குழந்தையே காணாமல் போனது போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது என்றார் நெகிழ்ச்சியுடன்.