அன்னா ஹசாரே விவகாரம்.... போலீசுக்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு கண்டனம்
அன்னா ஹஸாரேவை உண்ணாவிரதம் இருக்க விடாமல் தடுத்து கைது செய்ததற்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மாதவன் கூறுகையில், "அன்னா ஹசாரேவை தடுத்த விதம், அதிகாரிகளின் மிகவும் முட்டாள்தனமான, அற்பத்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து. இது பெரிய தவறு. அமைதியாக போராட்டம் நடத்தும் ஹசாரேவின் உரிமை, அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மவுனமாக இருப்பது ஏன்?
தகவல் பெறும் உரிமை சட்டம் போல, லோக்பால் சட்டமும் பின்னாளில் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறதா?", என்றார் வேகமாக.
பிபாஷா
நடிகை பிபாஷா பாசு கூறுகையில், "நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் 'ஊழல் என்னும் பேயை கொல்ல ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும்ட என்று கூறியுள்ளார்.
நடிகைகள் ஷபனா ஆஸ்மி, தியா மிர்சா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த முறை கருத்து தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











