Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அன்னா ஹசாரே விவகாரம்.... போலீசுக்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு கண்டனம்
அன்னா ஹஸாரேவை உண்ணாவிரதம் இருக்க விடாமல் தடுத்து கைது செய்ததற்கு நடிகர் மாதவன், நடிகை பிபாஷா பாசு போன்றவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் மாதவன் கூறுகையில், "அன்னா ஹசாரேவை தடுத்த விதம், அதிகாரிகளின் மிகவும் முட்டாள்தனமான, அற்பத்தனமான நடவடிக்கை என்பது எனது கருத்து. இது பெரிய தவறு. அமைதியாக போராட்டம் நடத்தும் ஹசாரேவின் உரிமை, அப்பட்டமாக மீறப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மவுனமாக இருப்பது ஏன்?
தகவல் பெறும் உரிமை சட்டம் போல, லோக்பால் சட்டமும் பின்னாளில் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மத்திய அரசு பயப்படுகிறதா?", என்றார் வேகமாக.
பிபாஷா
நடிகை பிபாஷா பாசு கூறுகையில், "நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் 'ஊழல் என்னும் பேயை கொல்ல ஹசாரேவுக்கு எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும்ட என்று கூறியுள்ளார்.
நடிகைகள் ஷபனா ஆஸ்மி, தியா மிர்சா ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முன்னணி நடிகர்கள் யாரும் இந்த முறை கருத்து தெரிவிக்கவில்லை.