Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Automobiles கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டல்லாஸ் இசை நிகழ்ச்சி மூலம் சென்னை உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதியுதவி
டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஹரியுடன் நான்' (ஜெயா டிவி) புகழ் 'ஹார்மொனி அன்லிமிட்டெட்' குழுவினரின் இந்த கச்சேரியை நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரவாரத்துடன் ஆரம்பமான இன்னிசை மழை, மணிக்கு அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் இரவு 7 மணி வரை நடந்தது.
750 இருக்கைகள் கொண்ட க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்திற்கு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விற்று விட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பிறந்த சிறுவர் சிறுமிகள் சரியான உச்சரிப்போடு தெள்ளத் தெளிவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பார்வையாளார்களைப் பரவசப்படுத்தியது.
திரை இசை கலைஞர்கள் மணி, நவீன் மற்றும் வெங்கட் இசையமைப்பில், ஹரியுடன் நான் புகழ் ரவிசங்கர், கோபால கிருஷ்ணன், நிரஞ்சன், லஷ்மி, பார்கவி, சரண்யா பாடல்களை பாடினர்.
டிக்கெட்டுகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பாக 43 ஆயிரம் டாலருக்கான காசோலையை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பில் ராமன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு அவர்கள், யு.எஸ். உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி டாக்டர். பத்மினியிடம் வழங்கினார்கள்.
முன்னதாக உதவும் கரங்கள் அமைப்பின் சேவையை விவரிக்கும் ஒலி ஒளி காட்சியும், சென்னையில் இரண்டு மாதம் தங்கியிருந்து சேவை செய்து வந்த செல்வி ரம்யாவின் உரையும் பார்வையாளர்களின் நெஞ்சை உருக்கியது.
டல்லாஸ் தமிழ் நேரம் ரேடியோவின் ஹேமா மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இந்த இசைக்கச்சேரி அமைந்திருந்த்து.
நிகழ்சிக்கான ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன், மெட்ரோப்லக்ஸ் தமிழ் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தார்கள்.
தகவல்: ஆர் தினகர்,
புகைப்படம்: முத்துக்குமார் ராமலிங்கம்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு