Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இலங்கை செல்ல எதிர்ப்பு: சல்மானுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய தமிழர்கள் கைது!
இந்திய சர்வதேச திரைப்பட விழா இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தூதராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டார். இந்திய சர்வதேச திரைப்பட விழா இலங்கையில் நடைபெறுவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டு முன்பு சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மற்றவர்களின் மனம் புண்படுமாறு எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன் என்று அமிதாப்பச்சன் தெரிவித்தார்.
தூதர் பொறுப்பிலிருந்து விலகினார்
ஆனால் உறுதியான எந்தவொரு அறிவிப்பையும் அமிதாப்பச்சன் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த மாதம் 11ம் தேதி அன்று மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப்பச்சன் அதிலிருந்து விலகினார். இதனையடுத்து புதிய விழா தூதராக பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீட்டை முற்றுகையிட்டு நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்தன.
இதனால் சல்மான் கான் வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை 10.30 மணிக்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சல்மான்கான் வீடு நோக்கி திரளான தமிழர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக கூறி அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.