Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் கருத்து: சிவசக்தி பாண்டியன் எதிர்ப்பு!
ஆயிரத்தில் ஒருவன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாஸன், "இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க. ஒரு படத்தை இன்னொரு படத்தோடு ஒப்பிட்டு பேசவே கூடாது. வைரமுத்து, ஷெல்லி மாதிரி எழுதுறாருன்னு சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
அவரது இந்தக் கருத்துக்கு தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பதில் சொன்னார் தயாரிப்பாளர் சங்க செயலாளரும், திரைப்பட நலவாரிய உறுப்பினருமான சிவசக்தி பாண்டியன்.
"ஐநூறு கோடி, ஆயிரம் கோடின்னு செலவு செய்து ஹாலிவுட்டில் படம் எடுக்கிறார்கள். ஆனால் நமது ஊரைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் அதே மாதிரி பிரமாண்டத்தை வெறும் முப்பது கோடியில் கொடுத்திருக்கிறார் என்றால் அதைப் பாராட்ட வேண்டாமா?
ஹாலிவுட் படம் மாதிரி எடுத்திருக்காருன்னு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும்? இதில் என்ன தவறு இருக்கிறது?" என்று கேட்டார்.
முன்னதாக தீராத விளையாட்டுப் பிள்ளை ஆடியோவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டார்கள். படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் காட்டப்பட்டன.
3 நாயகிகள் வேண்டாம் - விஷால்
இந்தப் படத்தில் நீத்து சந்திரா, சாரா ஜேன், தனுஸ்ரீ தத்தா ஆகிய 3 கதாநாயகிகள் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். இதுபற்றி விஷால் கூறுகையில், "பென்ஹர் என்ற பிரமாண்டமான ஆங்கில படத்தை கூட, ரீமேக்' செய்து விடலாம். ஆனால், 3 கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடிப்பது அத்தனை சிரமமானது. எனக்கு அவர்களுடன் எந்த மனஸ்தாபமும் இல்லை.
3 கதாநாயகிகளுடன் நடிப்பது என்றால், 10 'ஆக்ஷன்' படங்களில் நடிப்பதற்கு சமமாக உழைக்க வேண்டும். எனவே இனிமேல் 3 கதாநாயகிகளுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்" என்றார்.
விழாவில் பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஜி.கே.ரெட்டி, உதயநிதி ஸ்டாலின், ஸ்ரேயா ரெட்டி, கே.வி.ஆனந்த், டி.சிவா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், அகத்தியன், திரு, நடிகர்கள் ஜீவா, ஷக்தி, நடிகை நீது சந்திரா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் பேசினார்கள்.
பிஆர்ஓ நிகில் முருகன் வரவேற்றுப் பேசினார்.