நாடு முழுவதும் தடங்கல்கள், தடைகளைக் கடந்து ஆரக்ஷன் வசூல் மழை
நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்புகள், போராட்ங்கள், தடைகள், தடங்கல்கள் இருந்தும் பிரகாஷ்ஜா இயக்கத்தில் வெளியான ஆரக்ஷன் படத்துக்கு அமோக வசூல்குவிந்து வருகிறதாம். வெளியான நான்கு நாட்களிலேயே அது ரூ.26 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது இன்னும் சில நாட்களில் இரட்டிப்பாகும் என்றும் பெரும் வசூலை அள்ளும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அமிதாப் பச்சன், சைப் அலி கான்,தீபிகா படுகோன்உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது. ரூ. 42 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் அதை விட இரண்டு மடங்கு வசூலை அள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தைத் திரையிட உ.பி., பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் தடை நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும் இந்தி பேசும் மக்களின் தாயகமான உ.பிதான் முக்கியமானது என்பதால் அங்கும் தடை நீக்கப்பட்டால் படம் மிகப் பெரிய வசூலை எட்டும், புதிய சாதனை படைக்கும்எ ன பிரகாஷ் ஜா கூறுகிறார்.
உ.பியிலும் படத்தைத் திரையிடுவதற்கான சூழல் நெருங்கிவருவதாக ஜா நம்பிக்கையுடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











