Don't Miss!
- News அள்ள அள்ள அவ்வளவு தங்கம்.. 7 கோடி ரூபாய்.. சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
- Technology ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விசா மோசடி: தெலுங்கு நடிகைகளை விசாரிக்க தனிப்படை
அமெரிக்காவுக்கு செல்ல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக நடிகை புளோரா, புரோக்கர் வெங்கட் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் புளோராவுக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. வெங்கட் ரெட்டியை 4 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர்.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்குத் திரையுலகினர் குறித்த சில முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.
இதில் சில முக்கிய நடிகர், நடிகைகள் குறித்த பல முக்கிய தகவல்களை ரெட்டி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நடிகைகள்தான் அதிகம் என்றும் தெரிகிறது.
இதையடுத்து அந்த நடிகைகள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்த சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் இன்று மாலை ஹைதராபாத் செல்கின்றனர்.
இந்த விசாரணையில் அமெரிக்க விசா மோசடி தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.