Don't Miss!
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இங்கே எழவு-எதிர் வீட்டில் விருந்து: சீமான்
நெல்லை வக்கீல்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுகூட்டம் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்று இரவு நடந்தது. சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பாவணன், அரசு அமல் ராஜ் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் இயக்குனர் சீமான் பேசுகையில்,
பிரபாகரன் தமிழகத்தில் யாருடைய உயிரையும் கேட்கவில்லை. நம்முடைய உணர்வை அவர் எதிர்பார்க்கிறார். என் வீட்டில் எழவு, எதிர் வீட்டில் விருந்து என இருக்கும் ஒரு தேசத்தில் எங்கே இருக்கிறது இறையாண்மை, முல்லை பெரியாரில் தண்ணீர் தர மறுப்பவர்களும், காவிரியில் தண்ணீர் தர மறுப்பவர்களும்தான் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
தமிழகத்தில் எழுத்து சுதந்திரம் இருக்கிற அளவுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. எம்ஜிஆரின் கனவு தமிழ் ஈழமாகும். அதை அடைய துடிக்கும் நாங்கள் தான் உண்மையான அதிமுகவினர். ராஜபக்சே தமிழ் பெண்களை கடத்தி அவர்களது கருவை கலைக்கிறார். கருவில் இருக்கும் தமிழ் குழந்தையை கண்டு கூட சிங்களர்கள் பயப்படுகிறார்கள்.
இதை பேசுகின்ற சீமானை சிறையில் அடைக்கின்றனர். தமிழ் ஈழம் மலரும் வரை நான் பேசுவேன். அடிமையாக வாழ்வதை விட வீரமாக சாவதே மேல் என்பதை ஈழத்தமிழன் உணர்ந்து போராடுகிறான். எனக்கு சினிமா வருமானத்தை விட இனமானமே பெரிதானது.
இக்கூட்டத்தில் பேராசிரியர் அறிவழகன் தொ.பரமசிவம், வக்கீல்கள் ராசாசிங், தங்கசாமி, பாலகணேசன், இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அவர் போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
-
Thalaivar 171: ரோலக்ஸை விட தாறுமாறா இருக்கே.. தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதானா? லோகேஷ் ட்வீட்!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!