மறுபடியும் ஜெய் - அஞ்சலி!
ஜெய் - அஞ்சலி இருவரும் ஏற்கெனவே இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து, நிஜத்திலும் செம ஜோடி என்ற பெயரைச் சம்பாதித்துள்ளனர்.
'இருவருக்குள்ளும் காதல்... ஜெய்யோடு எப்போதும் இணைபிரியாமல் சுற்றுகிறார் அஞ்சலி," என்றெல்லாம் சமீப காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் மீண்டும் ஜோடி சேருகிறார்கள்... இது ஏஜிஎஸ் தயாரிக்கும் புதிய படத்துக்காக.
மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை இயக்கிய ஆர்என்ஆர் மனோகர் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த இரு படங்களைத் தயாரித்ததும் கூட ஏஜிஎஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் எங்கேயும் எப்போதும் படம் வந்த பிறகும் ஜெய்க்கு வாய்ப்புகள் இல்லை. அஞ்சலியின் பெயர் இப்போது வாய்ப்பு பெற்றுத்தரும் சக்தியாக மாறியுள்ளது.
நல்லாருந்தா சரி!


Click it and Unblock the Notifications











