Don't Miss!
- Finance RCB கப் அடிக்காவிட்டாலும், இந்த விஷயத்தில் கில்லி.. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் செய்த ராயல் சம்பவம்!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தமிழக அரசின் சலுகைகளால் தமிழ் திரையுலகம் நன்கு வளர்ந்து விட்டது-கருணாநிதி
சினேகா நாயகியாக நடித்துள்ள முரட்டுக்காளை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
மக்களின் மனதை புரிந்து திரைப்படங்களை எடுத்தால் வெற்றிபெற முடியும். பூம்புகார் திரைப்படத்தை எடுத்த போது கண்ணகியின் கதை, ஏற்கனவே திரைப்படமாக வெளியாகி உள்ளது என்று பிரபல தயாரிப்பாளர்களால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பூம்புகார் படம் மக்கள் மனதில் நிலைத்து நின்றது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழில் பெயர் சூட்டினால் வரி சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் மூலம், அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் தமிழ் திரைப்படத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
இப் படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விவேக். திருநங்கைகளுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார் கருணாநிதி.