Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிங்கமுத்துவை 3 நாள் காவலில் அனுமதிக்கக் கோரி போலீஸ் மனு
நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், வழக்குகளை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்து விடுவதாக நடிகர் சிங்கமுத்து மிரட்டினார் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து சிங்கமுத்துவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜாமீன் கோரி சிங்கமுத்து சைதாப்பேட்டை பெருநகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டுக்கு வருகிறது.
இதற்கிடையே சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நேற்று மாஜிஸ்திரேட்டு திருமகள் முன் அரசு தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்த வேண்டிய உள்ளதால் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையும் இன்றே நடைபெறும் எனத் தெரிகிறது.