twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீட்டில் மதுவிருந்து... வைபவ், சோனா, வெங்கட் பிரபுவை கைது செய்ய கோரிக்கை

    By Shankar
    |

    சென்னை: மங்காத்தா பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ், அதில் பங்கேற்ற நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, மகத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    மங்காத்தா பட வெற்றிக்காக அதில் நடித்த வைபவ் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு அப்படத்தில் நடித்த வைபவ், மகத் உள்ளிட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர்.

    நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி. பி.சரண், நடிகை சோனா ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மது விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்பிரபு மற்றும் மது விருந்தில் பங்கேற்ற நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளை கைது செய்யக் கோரியுள்ளனர்.

    இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

    நடிகர் வைபவ் வீட்டில் மது விருந்து நடந்ததாகவும் அதில் எஸ்.பி.பி.சரண் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.

    நட்சத்திர ஓட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மது பார்கள் திறக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் 30 பேரை அழைத்து நடிகர் வைபவ் மது விருந்து நடத்தியது கண்டிக்கத்தக்கது.

    அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

    எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    -இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Hindu Makkal Katchi, a political outfit demanded the police should be punished the actor Vaibav, Sona and others for conducting drinks party in house illegally.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X