twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 முறை தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜான்சன் மரணம்!

    By Shankar
    |

    Johnson Composer
    சென்னை: பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜான்சன் மாரடைப்பால் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

    கேரள இசையமைப்பாளர் ஜான்சன் நூற்றுக்கணக்கான மலையாள சினிமா பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். 2 முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் கேரள மாநில அரசின் விருதை 5 முறை பெற்று உள்ளார்.

    சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

    இசையமைப்பாளர் ஜான்சன் மறைவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.

    சக இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

    அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருச்சூரில் இன்று நடக்கிறது.

    English summary
    National Film Award winner and noted music composer Johnson Master, succumbed to a cardiac arrest on Thursday. He was 58. The last rites are expected to be performed at his home town Trichur on Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X