சொத்துக்களை அபகரிக்க சதி: ரஜினி மேனேஜர் போலீசில் புகார்!

சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருவர் கிருஷ்ணாராவ். வயது 70. ரஜியிடம் மேனேஜராக சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இப்போது ஓய்வு பெற்று அக்பராபாத் முதல் தெருவில் வசித்து வருகிறார்.
தியாகராய நகர் போலீசாரிடம் நேற்று அவர் அளித்துள்ள புகார் மனு:
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் 1978 முதல் 2001 வரை மானேஜராக பணி செய்தேன். ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துள்ளார். 'படையப்பா' படத்தில் தயாரிப்பாளராக ஆக்கி என்னை அவர் கவுரவபடுத்தினார். எனக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் சொத்துக்கள் உள்ளன.
எனது சொத்துக்களை அபகரிக்க என் குடும்பத்தினரே எனக்கு எதிராக செயல்படுகிறார்கள். எனக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். எனது சொத்துக்களை அபகரிக்க கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது சொந்த வீட்டில் வாழ முடியாமல், விடுதி ஒன்றில் தங்கியுள்ளேன். எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என் குடும்பத்தினர் தான் பொறுப்பு.
என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளித்து, என்னை கொலை செய்ய துடிக்கும் எனது குடும்பத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், என்று குறிப்பிட்டுளளார் கிருஷ்ணாராவ்.
போலீசார் இப்போது கிருஷ்ணாராவின் உறவினர்களிடம் விசாரணைய மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











