twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் சேரனின் 'முரண்'

    By Sudha
    |

    Cheran
    இயக்குநர் சேரன் தனது ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் முரண் என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். பெரும் பொருட் செலவில் இது படமாகிறதாம்.

    இப்படத்தில் சேரனும், பிரசன்னாவும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர். புதுமுக நாயகிகள் நடிக்கவுள்ளனர். ஜெயப்பிரகாஷ் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார்.

    வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சேரன். தற்போது தனது அடுத்த படைப்புக்காக அவர் தயாராகியுள்ளார். ஆனால் இதை தயாரித்து நடிக்க மட்டும் செய்கிறார் சேரன்.

    படத்தை இயக்குவது ராஜன் மாதவ். இவர் பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் ஆவார். மிஸ்கினிடம் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் ஆகிய படங்களில் இவர் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஆவார். படத்தின் இசைப் பணியை ராஜனின் சகோதரரான சஜன் மாதவ் கவனிக்கவுள்ளார்.

    முரண்பட்ட குணாதிசயம் கொண்டவர்கள் குறித்ததுதான் இந்தப் படத்தின் கதையாகும். அப்படிப்பட்ட இருவர் சந்திக்கும்போது அவர்களது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கப் போகிறார் சேரன். மிகவும் வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

    அஞ்சாதே படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்தவர் பிரசன்னா. இந்தப் படத்திலும் வித்தியாசமான பாத்திரமேற்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரிக்கு திரையிட திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கி நவம்பர் மாதம் முடிவடையுமாம்.

    படத்தின் செயல் தயாரிப்பாளராக நடராஜன் பழனியும், தயாரிப்பாளராக சேரனும் இருப்பார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராஜன் மாதவ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X