Don't Miss!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இன்று நிறைவேறிய ஷங்கரின் 4 ஆண்டு கனவு: மெய்சிலிர்த்த ரஜினி, ரஹ்மான்
Recommended Video
சென்னை: இயக்குனர் ஷங்கரின் நான்கு ஆண்டு கனவு இன்று நிறைவேறியுள்ளது.
2.0 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2.0 படத்தின் 4டி எஸ்.ஆர்.எல். டீஸர் போட்டுக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவருக்கும் 3டி கண்ணாடிகள் கொடுக்கப்பட்டது. டீஸர் துவங்கியபோது ஒலி சரியாக கேட்கவில்லை.
இதையடுத்து மேடைக்கு வந்த ஷங்கர் டீஸரை மீண்டும் போட்டுக் காட்டுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி டீஸர் மீண்டும் போட்டுக் காட்டப்பட்டது. நாம் பார்த்த டீஸரில் உள்ள காட்சிகளுடன் கூடுதல் காட்சிகள் இதில் இருந்தது.
3டி டீஸரை 4டி சவுண்டுடன் கேட்டவர்கள் மெய் சிலிர்த்தனர். தியேட்டர்களில் பார்வையாளர்களின் கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு 4 டி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷங்கர்.
இந்த 4டி சவுண்டில் தனது படத்தை வெளியிட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்று ஷங்கர் தெரிவித்தார்.