Don't Miss!
- News மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்? முக்கிய ஆதாரங்களை வெளியிடும் அரவிந்த் கெஜ்ரிவால்! EDக்கு டிவிஸ்ட்
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Finance ஆப்பிரிக்காவில் மாஸ்காட்டும் இந்திய நிறுவனங்கள்..TVS எங்க ஊர் பிராண்ட்-ன்னு சண்டை போடுறாங்கப்பா..!!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இன்று நிறைவேறிய ஷங்கரின் 4 ஆண்டு கனவு: மெய்சிலிர்த்த ரஜினி, ரஹ்மான்
Recommended Video
சென்னை: இயக்குனர் ஷங்கரின் நான்கு ஆண்டு கனவு இன்று நிறைவேறியுள்ளது.
2.0 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
2.0 படத்தின் 4டி எஸ்.ஆர்.எல். டீஸர் போட்டுக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவருக்கும் 3டி கண்ணாடிகள் கொடுக்கப்பட்டது. டீஸர் துவங்கியபோது ஒலி சரியாக கேட்கவில்லை.
இதையடுத்து மேடைக்கு வந்த ஷங்கர் டீஸரை மீண்டும் போட்டுக் காட்டுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி டீஸர் மீண்டும் போட்டுக் காட்டப்பட்டது. நாம் பார்த்த டீஸரில் உள்ள காட்சிகளுடன் கூடுதல் காட்சிகள் இதில் இருந்தது.
3டி டீஸரை 4டி சவுண்டுடன் கேட்டவர்கள் மெய் சிலிர்த்தனர். தியேட்டர்களில் பார்வையாளர்களின் கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு 4 டி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷங்கர்.
இந்த 4டி சவுண்டில் தனது படத்தை வெளியிட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்று ஷங்கர் தெரிவித்தார்.