Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்ட பிறகே 2.0 துணை இயக்குனருக்கு சம்பளம் கொடுத்த லைக்கா
சென்னை: 2.0 பட தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று இணை இயக்குனர் முரளி மனோகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 2.0. படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்று இணை இயக்குனர் முரளி மனோகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது,
இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.
"கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி" - "என் மகன் மருதனுக்குக் காய்ச்சல்" என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலுமில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து லைக்கா நிறுவனம் அவருக்கு வீடி தேடி வந்து சம்பளம் வழங்கியுள்ளது. அதையும் அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.