'2.0': ஷங்கர், ரஜினி சொன்னபடியே நடந்துவிட்டது #2Point0
Recommended Video

சென்னை: 2.0 படம் பார்த்த ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. நல்ல வேளை கேடிஎம் பிரச்சனை எதுவும் வரவில்லை.
ரசிகர்கள் அதிகாலை காட்சியை பார்த்து மகிழ்ந்தனர். படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அக்ஷய்
முதல் பாதியில் ரஜினியும், இரண்டாம் பாதியில் அக்ஷய் குமாரும் மிரட்டியுள்ளனர். ஆக மொத்தம் படம் பிளாக்பஸ்டர். #2Point0FDFS #2Point0
தலைவர்
இரண்டாம் பாதியில் படம் வேற லெவல். #2Point0FDFS #MegaBlockBuster2Point0
இந்திய சினிமா
இந்த அனுபவம் இந்திய சினிமா அல்லது ரஜினிகாந்துடன் மீண்டும் ஏற்படுமா என்று தெரியவில்லை. அதனால் என்ஜாய் பண்ணவும்.
ஷங்கர்
தொழில்நுட்பத்திற்காக ஷங்கர் மெனக்கெட்டது வீண் போகவில்லை. ரசிகர்கள் படத்தை பார்த்து பிரமித்து போயுள்ளனர்.
சிட்டி
எந்திரனை போன்றே 2.0 படத்திலும் சிட்டி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. படத்தை பார்த்து ரசிகர்கள் அதிசயிப்பார்கள் என்று ஷங்கரும், ரஜினியும் தெரிவித்தது போன்றே நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











