Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்
Recommended Video
பீஜிங்: ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் வெளியான 3 நாட்களில் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் வசூல் ஷங்கரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில் மேன் தொடங்கி சமீபத்தில் வெளியான இந்தியன் 2 வரையிலும் இது தொடர்கிறது. அதிலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் இயக்கிய பிரமாண்டத்தின் உச்சமான எந்திரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியதோடு வசூலிலும் சாதனை படைத்தது.
இதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அப்போதே திட்டமிடப்பட்டது. சினிமாவில் பொதுவாகவே ஒரு சென்டிமெண்ட் உண்டு. ஒரு திரைப்படம் நன்றாக ஓடி வசூலாகிவிட்டால், அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த சென்டிமெண்ட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை எடுக்க திட்டமிடப்பட்டது.
நடிகைகள் தேவை... போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்
ஆனால், அதற்கு கிட்டத்தட்ட 5 பில்லியனுக்கு மேல் செலவாகும் என்பதால், அந்தப்படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அப்போதைக்கு 2.0 திரைப்படத்தை எடுக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்ததை அடுத்து 2.0 படம் மின்னல் வேகத்தில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், சுமார் 570 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியும், வசூலையும் பெறவில்லை.
பிரமாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதோடு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழிலும், தெலுங்கிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்தியில் வியாபார ரீதியில் மட்டுமாவது ஓரளவு லாபத்தை கொடுத்தது.
இந்நிலையில் சீனாவில் 2.0 படம் வெளியாகி மூன்று நாட்களில் சராசரியாக 20 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மேலும் சில நாட்கள் ஓடினாலும் 50 கோடியாவது வசூல் ஆகுமா என்பதே சந்தேகம் தான்.
சீனாவிலாவது நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவிக்கும் என்று நம்பி இருந்த இயக்குனர் ஷங்கருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் ஒரு தமிழ் திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளது என்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை.
நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படம் சீனாவில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டியது. அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் 1200 கோடிக்கும் மேல் வசூலில் பட்டையை கிளப்பியது. இயக்குனர் ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 படமாவது நல்ல வசூலை கொடுக்கும் என்று படக்குழுவினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!