twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் செந்தில் கூட்டத்தில் கல்வீச்சு-2 சிறுமிகள் படுகாயம்

    By Sudha
    |

    Comedy Actor Senthil
    அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தபோது திடீரென கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 2 சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் வைகைச் செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

    அடிக்கடி மின் தடை, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல். இவர்களுக்கா உங்கள் ஓட்டு. சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்கின்றனர்.

    சொல்லாத எதை செய்தனர்? மின்தடை, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு இதுதான் சொல்லாமல் செய்தது என்று பேசினார்.

    அப்போது திடீரென சிலர் செந்தில் மீது கல்வீசினர். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 11 வயது மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    2 girls injured in stone pelting in Actor Senthil's meeting. Senthil was campaigning in Aruppukottai. While he was slamming DMK govt some unidentified persons pelted stones on Senthil. He escaped without any injury. But two girls got injured.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X