twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு

    By Sudha
    |

    Kushboo
    சென்னை: த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் முடிவு பற்றி விமர்சன‌ம் செ‌ய்த ‌நடிகை குஷ்பு மீது கர்நாடக அ.தி.மு.க அவதூறு வழக்கு தொடர்‌ந்து‌ள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து கருத்து நடிகை கு‌ஷ்பு கருத்து தெரிவிக்கையில், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. இதற்காக மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.

    நடிகை குஷ்புவின் இ‌ந்த பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக் கூறி சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை வரு‌ம் ஜூன் 16 ம் தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

    நடைபெற்ற சட்ட மனறத் தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவிற்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் சென்றும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

    English summary
    Karnataka ADMK state secretary Pugalendhi has sued Actress Kushboo for her comments on TN poll results. Kushboo had said that, TN poll defeat is not for the DMK, but for the people of Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X