வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சந்தானத்திற்கு எதிராக போராட்டம்

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் வக்கீல்களாக சந்தானம், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். அதில் சந்தானம் வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், வக்கீல் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சந்தானம் நடித்துள்ளார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் நடித்துள்ள காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இந்தப் போராட்டத்தால் எழும்பூர் கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.


Click it and Unblock the Notifications











