twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சந்தானத்திற்கு எதிராக போராட்டம்

    By Sudha
    |

    Santhanam
    சென்னை : வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தததற்காக காமெடி நடிகர் சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

    விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் வக்கீல்களாக சந்தானம், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். அதில் சந்தானம் வக்கீல்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்துள்ளதாக கூறி சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து வக்கீல்கள் கூறுகையில், வக்கீல் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சந்தானம் நடித்துள்ளார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் நடித்துள்ள காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

    இந்தப் போராட்டத்தால் எழும்பூர் கோர்ட்டில் பரபரப்பு நிலவியது.

    English summary
    Lawyers in Egmore court have protested against Actor Santhanam for his role in Deiva Thriumagal movie. The charged that, Santhanam has acted as a lawyer in the movie. His portrayal in the movie has insuted the lawyers. He has to apologise immediately and also the scenes involving Santhanam have to be deleted from the movie, they urged.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X