Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
வாவ்.. 20 லட்சம் பேரா.. ரம்பாவிடமிருந்து பொங்கி வழிந்த நன்றி.. செம ஹேப்பியாம்!
சென்னை : 90களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் ரம்பா. கொஞ்சிக்கொஞ்சி பேசும் அழகாலும், தனது கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு தன்வசப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கார்த்திக்,அர்ஜூன் , பிரபுதேவா, விஜய், அஜித்,ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் ரவுண்டி கட்டி நடித்துள்ளார்.
'நம்ம ரம்பா சார்..' குழந்தைகளுடன் 'அழகிய லைலா'வின் அசத்தல் போஸ்! லைக்ஸ் அள்ளும் க்யூட் போட்டோஸ்!
தொடை அழகி
பால்போன்ற தேகமுடைய ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் அழகு பார்த்தனர். சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த போதே, சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் ரம்பா
அழகிய லைலா
1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அழகிய லைலா பாடல் இன்று வரை அனைவரும் ரசிக்கும் பாடலாகவே உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை
2010ம் ஆண்டு இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்குபிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரம்பா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். ரம்பாவுக்கு 2 மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
நன்றி கூறிய ரம்பா
திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரம்பா. இன்ஸ்டாவில் இவரை, 2 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றார். இதற்கு நன்றி கூறும் விதமாக தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், கன்னடம் ,மலையாளம் என 6 மொழிகளில் நன்றி கூறியுள்ளார்.