Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எந்திரனின் தொடர்ச்சியா 2.ஓ? - இயக்குநர் ஷங்கர் விளக்கம்
Recommended Video
துபாய்: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.ஓ படம் ஏற்கெனவே அவர் நடித்து வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
துபாயில் நடந்த 2.ஓ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்துடன் கலந்து கொண்டனர் 2.ஓ படக்குழுவினர்.
அப்போது இயக்குநர் ஷங்கரிடம், 2.ஓ படம் எந்திரனின் தொடர்ச்சியா என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.
எந்திரனின் தொடர்ச்சியா?
அதற்கு பதிலளித்த ஷங்கர், "இந்தப் படம் எந்திரனின் தொடர்ச்சி அல்ல. கதை, படமாக்கம் எல்லாமே வேறு. ஆனால் எந்திரனின் பாத்திரங்கள் இதில் இருக்கும்.
சர்வதேச மெசேஜ் இருக்கு
2.ஓ படம் ஹாலிவுட் படம் மாதிரிதான் இருக்கும். சர்வதேச அளவில் சொல்லக்கூடிய ஒரு செய்தி இந்தப் படத்தில் உள்ளது.
அக்ஷய்குமார்
அக்ஷய் குமார் வெறும் வில்லன் அல்ல. பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாத்திரம் அது.
ஏன் அர்னால்ட் இல்லை?
இந்தப் படத்துக்கு அக்ஷய் குமார் வேடத்தில் முதலில் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகரைத்தான் முதலில் பேசினோம். அவருக்கும் ஸ்க்ரிப்ட் ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தானபோது சில விஷயங்கள் செட்டாகவில்லை. அதனால் அவருடன் பணியாற்ற முடியாமல் போனது," என்றார்.