லீனாவுடன் 2 தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பு... யார் யார்?
சென்னை: பெரும் பண மோசடியில் சிக்கிக் கைதாகியுள்ள கேரள நடிகை லீனா மரியா பாலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தனது காதலரான சுகாஷ் சந்திரசேகருடன் இணைந்து பெரும் பண மோசடிகளை நடத்தி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் லீனா.
சென்னை போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளன். விசாரணையில் பல பரபரப்புத் தகவல்களை லீனா கக்கியுள்ளதாக தெரிகிறது.

சுகாஷை நம்பி
சுகாஷ் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் லீனா கூறியுள்ளதாக தெரிகிறது. சுகாஷை நம்பிதான் மோசம் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

குடும்பம் நடத்தி கருவைக் கலைத்து
சுகாஷுடன் லிவின் உறவில் இருந்து வந்த லீனா இதனால் கர்ப்பமும் தரித்து பின்னர் அதைக் கலைத்துள்ளார்.

லீனாவின் தொடர்புகள்
லீனாவுக்கு யாருடனெல்லாம் தொடர்பு இருந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். அவரது தொடர்புகள் குறித்தும் விசாரித்து தகவல் சேகரித்துள்ளனர்.

2 நடிகர்களுடன்
லீனாவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் விசாரணை
அந்த இரண்டு நடிகர்கள் யார் என்ற விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

விஸ்வரூபம் எடுக்கும்
லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.லீனா விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்று காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











