twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழப் படுகொலை பேனர் - மன்சூர் அலிகான் மீது வழக்கு

    By Staff
    |

    Mansoor Ali khan
    திருச்சி: திருச்சி தொகுதியில் போட்டியிடும் லட்சிய திமுக வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பிரசாரம் செய்ததாக கூறி அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    லட்சிய திமுக சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் திருச்சியில் போட்டியிடுகிறார். தனது பிரசார வேனில், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய பேனர்களை அவர் கட்டியுள்ளார்.

    இது தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. எனவே அகற்ற வேண்டும் என அவருக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் அந்த பேனர்களில் தனது படத்தையும் அவர் இடம் பெற வைத்தார்.

    இதையடுத்து மன்சூர் அலிகான் நடத்தை விதிகளை மீறியதாக கூறி போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X