Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிக்கலில் பிரசாந்த் படம்!
பொன்னர் சங்கர் படம் எடுத்த போது, தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் இப்படி தலைகீழாக மாறிப் போகும் என படத்தின் இயக்குநர் தியாகராஜனோ அல்லது அவரது மகன் பிரசாந்தோ நி்னைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
ஒரு இயக்குநராக தியாகராஜனுக்கு பொன்னர் சங்கர் நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தாலும், பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிட்டது படம். காரணம், அது கருணாநிதி வசனம் எழுதியது என்பதுதான் என இப்போது மேடைபோட்டுக் கூவி வருகிறார்கள் சிலர். ஆனால் இவர்கள்தான் பொன்னர் சங்கர் மேடையில் கருணாநிதி கதை வசனத்தைப் புகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிரசாந்த் நடித்து, தியாகராஜன் இயக்கியுள்ள மற்றொரு படமான மலையூர் மம்பட்டியான் ரிலீசுக்கு தயாராக நிற்கிறது.
இந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியுமா என திரையுலகமே தியாகராஜனைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் முன்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து, கடந்த ஆட்சியின்போது கருணாநிதி முகாமுக்குப் போனவர் தியாகராஜன்.
ஆனால், அவரோ எது பற்றியும் கவலைப்படாமல் படத்தை வெளியிடுவதில் குறியாக உள்ளார். விஷயம் கேள்விப்பட்ட பிறகு, சில விநியோகஸ்தர்கள் தாங்களாக தியாகராஜனை தொடர்பு கொண்டு வியாபாரம் பேசினார்களாம்.
"எனக்கு எந்த பயமும் தயக்கமும் இல்லை. அரசியல் நிலைப்பாடு வேறு. ஒரு கலைஞனாய் ஆட்சியாளர்களின் தயவை நாடும் சினிமா உலகில் நானும் ஒருவன். ஆட்சிக் கெதிராக நான் எதிலும் ஈடுபடாத போது, என் படத்தை எதற்கு தடுக்கப் போகிரார்கள். படம் விரைவில் வெளியிடப்படும்," என்றார்.