Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விபத்தில் ரசிகர் மரணம்: ரஜினி அனுதாபம்!
சென்னை: மதுரையில் ரசிகர் கார்த்திக் விபத்தில் மரணமடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் வெளியிட்டுள்ளார் ரஜினி. விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரி மகன் திருமணத்துக்காக மதுரை சென்றிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து ரசிகர்கள் வந்த டாடா சுமோ வாகனம், டிரைவரின் அலட்சியத்தால் விபத்துக்குள்ளானது. இதில் கார்த்திக் என்ற ரசிகர் மரணம் அடைந்தார்.
இந்தச் செய்தி அறிந்து அனுதாபம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார் ரஜினி. அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மதுரை தெற்குவாசல் 45-வது வார்டு ரஜினி மன்ற துணைத்தலைவர் ஆர்.எம்.கார்த்திக்கின் அகால மரண செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.