Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குண்டர் சட்டத்தில் கைதாகிறார் சக்சேனா? - கமிஷனர் பேட்டி
இது குறித்து அவர், செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், "சன் பிக்சர்ஸ் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது 5 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன.
இப் புகார்கள் குறித்து விசாரணை செய்ய மத்திய குற்றப்பிரிவில் ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவு போலீஸார் புகாரின் உண்மைத் தன்மையை பொருத்து நடவடிக்கை எடுப்பார்கள்.
சக்சேனாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது குறித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த விசாரணை அதிகாரிதான்", முடிவு செய்வார் என்றார்.
சக்சேனாவுக்கு மீண்டும் போலீஸ் காவல் ?
இதற்கிடையே வல்லகோட்டை படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியதில் ரூ.55 லட்சம் மோசடி செய்து விட்டதாகக் கூறப்பட்டுள்ள புகாரில் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பன், அழகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சக்சேனாவை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி முன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சக்சேனா 'போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை' என்று கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் காவல் மற்றும் ஜாமீன் மனுக்கள் மீதான 2 தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட்டு அகிலா ஷாலினி, 20-ந்தேதி (இன்று ) மாலை மனுக்கள் மீதான உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.