Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழ் சினிமா நிஜ நிலமை: 5 மாதங்களில் ரூ 200 கோடி இழப்பு - கேயார்
சென்னை: கடந்த 5 மாதங்களில் ரூ 200 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது தமிழ் சினிமா என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
ஒரு பக்கம் தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஆண்டு 200 படங்கள் வெளியாகும் என்ற சூழல்.
ஆனால் வெளியாகும் படங்களில் 10 சதவீதம்கூட தேறாத நிலை. சேட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்கே ஓடிப் போயிருப்பார்கள்.
இந்த நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஒரு விழாவில் பேசுகையில், "சினிமாவை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஏதேதோ ஆசையில் சினிமா எடுக்க வருகிறார்கள். இதை ஒரு பக்காவான தொழிலாகப் பார்த்து, திட்டமிட்டு யாரும் சினிமா எடுப்பதில்லை. அதுதான் பிரச்சினை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் தொடக்கம் மோசமாக உள்ளது. படங்கள் சரிவர ஓடாததால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிகவும் மோசமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 164 படங்கள் வெளிவந்தன. ஆனால் இன்னும் 200 படங்கள் சென்சார் சான்று வாங்கியும் வெளிவர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன," என்றார்.