Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சினிமா நிஜ நிலமை: 5 மாதங்களில் ரூ 200 கோடி இழப்பு - கேயார்
சென்னை: கடந்த 5 மாதங்களில் ரூ 200 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது தமிழ் சினிமா என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
ஒரு பக்கம் தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஆண்டு 200 படங்கள் வெளியாகும் என்ற சூழல்.
ஆனால் வெளியாகும் படங்களில் 10 சதவீதம்கூட தேறாத நிலை. சேட்டிலைட் உரிமை என்ற ஒரு விஷயம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல தயாரிப்பாளர்கள் சொந்த ஊருக்கே ஓடிப் போயிருப்பார்கள்.
இந்த நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஒரு விழாவில் பேசுகையில், "சினிமாவை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஏதேதோ ஆசையில் சினிமா எடுக்க வருகிறார்கள். இதை ஒரு பக்காவான தொழிலாகப் பார்த்து, திட்டமிட்டு யாரும் சினிமா எடுப்பதில்லை. அதுதான் பிரச்சினை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் தொடக்கம் மோசமாக உள்ளது. படங்கள் சரிவர ஓடாததால், கடந்த ஐந்து மாதங்களில் தமிழ் பட உலகுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிகவும் மோசமாக இருக்கிறது. சென்ற ஆண்டு 164 படங்கள் வெளிவந்தன. ஆனால் இன்னும் 200 படங்கள் சென்சார் சான்று வாங்கியும் வெளிவர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன," என்றார்.