Don't Miss!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- News
திருப்பத்தூர் அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்
- Lifestyle
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத தினமும் நைட் டைம்-ல குடிங்க போதும்..!
- Technology
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
200 கோடி மோசடி வழக்கில் கைதாவாரா ஜாக்குலின்? சார்ஜ் சீட்டில் அவரது பெயரையும் சேர்த்த அமலாக்கத்துறை!
மும்பை: மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் படு நெருக்கமாக தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் குற்றவாளி என சார்ஜ் சீட்டில் அமலாக்கத்துறையினர் பதிவு செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
இலங்கையில் இருந்து மும்பை வந்து பிரபல பாலிவுட் ஹீரோயினாக மாறியவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.
சமீபத்தில் கன்னட திரைப்படமான விக்ராந்த் ரோணா படத்தில் நாயகியாக நடித்து இருந்தார்.
“Kiss
me“போட்டோவை
பகிர்ந்து
ரசிகர்களிடம்
முத்தம்
கேட்ட
அஜித்
பட
நடிகை!

218 கோடி மோசடி
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 218 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸிடம் பலமுறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தனர். இதன் காரணமாக ஏகப்பட்ட சிக்கலில் சிக்கினார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற அவரை மும்பையில் போலீசார் மடக்கி பிடித்து பாஸ்போர்ட்டையும் ரத்து செய்தனர்.

பல கோடி மதிப்புள்ள பரிசுகள்
சுமார் 10 கோடி மதிப்பிலான காதல் பரிசுகளை சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு வழங்கியது தெரிய வந்த நிலையில், தான் இந்த வழக்கில் வசமாக சிக்கினார் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். மேலும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மாற்றுவதற்கு இவர் உதவி செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து இவரை விசாரித்து வந்தனர்.

ஜாக்குலினும் குற்றவாளி
218 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து ஜாக்குலினும் குற்றவாளி என தற்போது அவர் மீது அமலாக்கத் துறையினர் அதிரடியாக சார்ஜ் சீட் ஃபைல் செய்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஜாக்குலினிடம் இருந்து சுமார் 7.27 கோடி மதிப்பிலான நகைகள், விலையுயர்ந்த குதிரைகள் மற்றும் பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கைதாவாரா பாலிவுட் நடிகை
சார்ஜ் சீட்டில் இவரும் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதிரடியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்றும் தேவையில்லாமல் தன்னை கோர்த்து விட்டுள்ளனர் நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

ராம் சேது
கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா படத்தில் நடித்திருந்த ஜாக்குலின் அடுத்ததாக ரன்வீர் சிங்கின் சர்கஸ் மற்றும் அக்ஷய் குமாரின் ராம் சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதில் இருந்து தான் இந்த பிரச்சனையில் அவர் சிக்கிக் கொண்டார்.