Don't Miss!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜெயம் ரவி, சூர்யாவுடன் "முடிய"ப் போகும் 2015
சென்னை: ஜெயம் ரவியின் பூலோகம் ,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்களுடன் இந்த வருடம் தனது வாழ்நாளை முடித்து கொள்ளப்போகிறது.
இந்த 2015 ம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் சுமார் 10% படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதில் வெற்றிகளை சுவைத்து கோலிவுட்டின் ஜெயமான நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.
இந்த 2015 முடிய இன்னும் சரியாக 11 நாட்களே உள்ளன. இதில் கடந்த வாரம் தங்கமகன் திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 24 ம் தேதி பூலோகம், பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இதே தேதியில் வெளியாகவிருந்த விமலின் அஞ்சலை மற்றும் ரமேஷ் அரவிந்தின் வில் அம்பு ஆகிய திரைப்படங்கள் எதிர்பாராதவிதமாக தள்ளிப் போயிருக்கின்றன.
கடைசி நேரத்தில் இந்தப் படங்களில் ஒருசில மாறுதல்கள் ஏற்படலாம் எனினும் தற்போதைக்கு மேலே சொன்ன படங்கள் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.
ஜெயம் ரவிக்கு ஏற்கனவே 2 படங்களின் மூலம் ஜெயம் கிடைத்து விட்ட நிலையில் சூர்யாவிற்கும் அது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.