Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.என். லட்சுமி நமக்குக் கிடைத்த பொக்கிஷம், கமல் புகழாஞ்சலி
பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் லட்சுமி மீது தனிப்பாசம் கொண்டிருந்தார் கமல்.
எஸ்.என்.லட்சுமி குறித்து கமல் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் உள்ள கமல் லட்சுமி குறித்துக் கூறுகையில்,
எனக்கு மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி நல்ல பழக்கம். அவரது திறமையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளேன். கே. பாலசந்தரின் நாடகப்பள்ளியில் இருந்து நான் தேர்ந்தெடுத்த பொக்கிஷம் அவர். அபாரத் திறமை வாய்ந்தவர்.
மைக்கேல் மதன காமராஜனில் திருட்டுப்பாட்டியாக வந்த அவர் தானா தேவர் மகனில் பெரியாத்தாவாகவும், விருமாண்டியில் பாட்டியாகவும் வந்தார் என்று என்னால் நம்பவே முடியவில்லை.
இளம்பெண்ணாக இருக்கையிலேயே உங்களை அம்மாவாக நடிக்க வைத்துவிட்டனர் என்று நான் கிண்டலடிப்பேன். அதற்கு அவர், ஆமாம் தம்பி, அப்படித்தான் ஆயிடுச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அவர் ஆர்.எஸ். மனோகர், சிவாஜி, எம்.ஜி.ஆர் என பல தலைமுறை நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
1960களுக்குப் பிறகு எஸ்.என். லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் நாகேஷ் போன்ற சிறந்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அத்தகைய திறமை வாய்ந்தவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது மாறாக போற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவரைக் கொண்டாடினேன், இனியும் கொண்டாடுவேன்.
கதாபாத்திரம் இது தான் என்று சொன்னாலே போதும். அவர் அதை புரிந்து கொண்டு கச்சிதமாக நடிப்பார், பிரமாதமாக நடிப்பார் என்றார் கமல்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!