ராஜ்குமார் மகனுடன் நடிக்க நயனுக்கு பிரபுதேவா தடை!

பிரபுதேவா, நயனதாரா நட்பு குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபுதேவாவின் அட்வைஸ்படிதான் சினிமா தொடர்பான முடிவுகளை எடுக்கிறாராம் நயனதாரா.
ஆனாலும் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகளும் குவிந்து விடவில்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடத்தி வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கி்போதுதான் அவருக்கு திடீரென மயக்கம் வந்து விழுந்து விட்டார். நன்கு ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கூறியதன் பேரி்ல தற்போது ஓய்வில் இருப்பதாக தெரிகிறது.
வேறு படம் எதுவும் அவர் வசம் இல்லை. இந்த நிலையில் கன்னடத்திலிருந்து அவரைத் தேடி மெகா வாய்ப்பு வந்தது. படத்தின் நாயகன் சிவராஜ்குமார். படத்தின் பெயர் ஜோகய்யா. இது சிவராஜ்குமாரின் 100வது படம். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடி வரை நயனதாராவிடம் சம்பளம் பேசினர்.
தனது அட்வைஸரிடம் இதுகுறித்து கேட்டாராம் நயனதாரா. ஆனால் இப்படம் வேண்டாம் என பிரபுதேவா கூறி விட்டாராம். இதையடுத்து சிவராஜ்குமார் படத்தில் நடிக்க நயனதாராவும் மறுத்து விட்டாராம்.
நடிக்க தயாராக இருந்தவரை இப்படி கெடுத்து விட்டாரே என்று சிவராஜ்குமார் தரப்பு பிரபுதேவா மீது சற்று கோபமாக உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











