Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ராஜ்குமார் மகனுடன் நடிக்க நயனுக்கு பிரபுதேவா தடை!
பிரபுதேவா, நயனதாரா நட்பு குறித்து விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. தற்போது பிரபுதேவாவின் அட்வைஸ்படிதான் சினிமா தொடர்பான முடிவுகளை எடுக்கிறாராம் நயனதாரா.
ஆனாலும் அவரைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகளும் குவிந்து விடவில்லை. தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மட்டுமே நடத்தி வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கி்போதுதான் அவருக்கு திடீரென மயக்கம் வந்து விழுந்து விட்டார். நன்கு ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் கூறியதன் பேரி்ல தற்போது ஓய்வில் இருப்பதாக தெரிகிறது.
வேறு படம் எதுவும் அவர் வசம் இல்லை. இந்த நிலையில் கன்னடத்திலிருந்து அவரைத் தேடி மெகா வாய்ப்பு வந்தது. படத்தின் நாயகன் சிவராஜ்குமார். படத்தின் பெயர் ஜோகய்யா. இது சிவராஜ்குமாரின் 100வது படம். இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 1 கோடி வரை நயனதாராவிடம் சம்பளம் பேசினர்.
தனது அட்வைஸரிடம் இதுகுறித்து கேட்டாராம் நயனதாரா. ஆனால் இப்படம் வேண்டாம் என பிரபுதேவா கூறி விட்டாராம். இதையடுத்து சிவராஜ்குமார் படத்தில் நடிக்க நயனதாராவும் மறுத்து விட்டாராம்.
நடிக்க தயாராக இருந்தவரை இப்படி கெடுத்து விட்டாரே என்று சிவராஜ்குமார் தரப்பு பிரபுதேவா மீது சற்று கோபமாக உள்ளதாம்.